சென்னை: சிறைவாசம் அனுபவிக்காத வகையில் முன்னாள் முதல்வர் காலஞ்சென்ற ஜெயலலிதாவைக் கடவுள் காப்பாற்றி விட்டதாக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறி உள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலையை பயன்படுத்தி பாஜக தமிழகத்தில் காலூன்ற நினைக்கக் கூடாது என்றும் குழம்பிய குட்டையில் பாஜக மீன் பிடிக்க முயற்சிக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார். "சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா வுக்கும் சேர்த்துதான் தண்டனை வழங்கப்பட் டுள்ளது. "அவர் உயிரோடு இல்லை. கடவுள் காப்பாற்றி விட்டார். இல்லாவிட்டால் இவர்களுடன் சேர்ந்து அவரும் சிறை செல்ல வேண்டியிருந்திருக்கும்.
திருநாவுக்கரசர்: ஜெயாவைக் காப்பாற்றிய கடவுள்
1 mins read

