'சிறையிலிருந்து விரைவில் வருவேன்'

'சிறையிலிருந்து விரைவில் வருவேன்'

1 mins read

பெங்களூர்: கவலைப்படாமல் இருங்கள். சிறையில் இருந்து விரைவில் விடுதலையாகி வெளியே வருவேன் என்று கணவர் நடராஜனுக்கு சசிகலா ஆறுதல் கூறினார். நான்காண்டு சிறைத் தண்டனையுடன் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறைக்குச் சென்ற சசிகலாவுக்கு உறவினர்களைச் சந்திக்க 15 நிமிடம் அவகாசம் தரப்பட்டது. அப்போது சசிகலாவும் அவரது கணவர் நடராஜனும் கண் கலங்கினர். சில விநாடிகளுக்குப் பிறகு கணவரை அணைத்த வாறு "எனது சொந்த முயற்சியால் சிறையில் இருந்து விரைவில் வெளியே வருவேன், கவலைப்படத் தேவையில்லை என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பாருங்கள்," என்று துக்கத்துடன் அழுதவாறு கூறினார்.