சென்னை: அதிமுகவின் பொதுச் செயலாளர் சசிகலா தரப்பு ஆதர வாளரான எடப்பாடி பழனிசாமி முதல்வராகப் பதவியேற்றுள்ளார். அந்த சூட்டோடு சிறையில் இருக்கும் சசிகலாவைச் சந்தித்து வாழ்த்துப்பெற எடப்பாடி பழனிசாமி பெங்களுரு செல்வார் எனத் தகவல் வெளியானது. ஆனால் இந்தப் பயணம் கைவிடப்பட்டதாக பின்னர் வெளி யான தகவல்கள் தெரிவித்தன. இதன் தொடர்பில் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தாம் பெங்களூரு செல்லவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். இதன் பின்னணியை ஆராய்ந்த தில் சசிகலாவே இப்போதைக்கு சிறைக்கு வந்து தம்மைச் சந்திக்க வேண்டாம் என்று கூறிவிட்டதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக் கின்றன.
சிறைக்கு வர வேண்டாம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு சசிகலா உத்தரவு
1 mins read

