சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களை மீண்டும் தங்கள் பக்கம் இழுப்பதற்கான முயற்சிகளை சசிகலா தரப்பு மேற்கொண்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஓபிஎஸ் அணியில் உள்ள எம்எல்ஏக்கள், மூத்த நிர்வாகிகளை மீண்டும் அதிமுகவில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளைச் செங்கோட்டையன் உள்ளிட்ட சிலர் மேற்கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பே இரு அணிகளுக்கும் இடையே சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது என்றும் அச்சமயம் இணக்கமான முடிவு எதையும் எடுக்க முடியவில்லை என்றும் தமிழக ஊடகம் தெரிவித்துள்ளது. பன்னீர்செல்வம் சமரசத்துக்கு ஒத்துவராத பட்சத்தில் அவரைத் தனிமைப்படுத்த அதிமுக தலைமை முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
பன்னீர்செல்வம் ஆதரவாளர்களை இழுக்க அதிமுக தலைமை முயற்சி
1 mins read

