கறுப்புப் பணம்: ரூ.500,000க்கு குறைவெனில் விசாரணை இல்லை

கறுப்புப் பணம்: ரூ.500,000க்கு குறைவெனில் விசாரணை இல்லை

1 mins read

புதுடெல்லி: ஈட்டும் சம்பளத்தை விட அளவுக்கும் அதிகமான பணத்தை வங்கியில் டெபாசிட் செய்திருப்பவர்களிடம் பணம் எப்படி வந்தது, எங்கிருந்து வந்தது, யார் கொடுத்தது போன்ற விவரங்களை விசாரித்து விவரங் களைச் சேகரித்து வரும் வருமான வரித் துறையினர், கணக்கில் காட்டப்படாத பணத்தை வங்கியில் டெபாசிட் செய்தவர்களிடம் 2ஆம் கட்ட சோதனையை விரைவில் தொடங்க உள்ளனர். கணக்கில் காட்டப்படாத ரூ.4 லட்சத்து 50,000 கோடி டெபாசிட் செய்தவர்களுக்கு எதிராக 'ஆபரேஷன் கிளன் மணி' என்ற பெயரிலான வேட்டையை வருமான வரித்துறை தொடங்கியது. இதன் முதல்கட்ட சோதனை யில் ரூ.5 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்த 18 லட்சம் பேரிடம் விளக்கம் கேட்டு மின் னஞ்சல், குறுஞ்செய்திகள் அனுப் பப்பட்டன.

விவரம்: epaper.tamilmurasu.com.sg