பிரதமர் வருகை; மணிப்பூரில் வெடிகுண்டுகள் கண்டெடுப்பு

பிரதமர் வருகை; மணிப்பூரில் வெடிகுண்டுகள் கண்டெடுப்பு

1 mins read

இம்பால்: அடுத்த மாதம் 4, 8 தேதிகளில் மணிப்பூர் மாநில சட்ட மன்றத் தேர்தல் நடக்கிறது. இதில் போட்டியிடும் பாரதிய ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்வதற்காக நேற்று பிரதமர் நரேந்திர மோடி இம்பால் வந்தார். இம்பாலின் மேற்கு மாவட்டத் தில் உள்ள லாங்ஜிங் அச்சவுபா திடலில் நடைபெற்ற பிரசாரக் கூட் டத்தில் பங்கேற்று அவர் பேசினார். முன்னதாக பிரதமரின் பயணத் துக்கு அங்குள்ள கிளர்ச்சியாளர் குழுக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். மணிப்பூர் மக்களை பிரதமர் ஏமாற்றுவதாக குற்றம் சாட்டிய இந்தக்குழுவினர் பிரதமரின் வருகையை எதிர்த்து நேற்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

விவரம்: தமிழ்முரசின் இ-பேப்பரில் பார்க்கவும்