விமான விபத்து தவிர்ப்பு; 400 பயணிகள் தப்பினர்

விமான விபத்து தவிர்ப்பு; 400 பயணிகள் தப்பினர்

1 mins read

புதுடெல்லி: இந்தியாவின் அக மதாபாத் நகர விமான நிலையத்தில் பெரும் விமான விபத்து தவிர்க்கப் பட்டதால் 400 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இரு விமானங்களும் நேருக்கு நேர் மோதவிருந்தன. ஆனால் கடைசி நேரத்தில் தவிர்க்கப்பட்டது என்று விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. அகமதாபாத் விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு 400 பயணிகளுடன் துபாய் புறப்படுவதற்காக 'ஸ்பைஸ்ஜெட்' விமானம் காத்திருந்தது. விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையிலிருந்து அனுமதி கிடைத்ததும் விமானம் புறப்படத் தயாரானது. ஓடு பாதையில் முழு வேக மெடுத்து விமானத்தை உயரே கிளப்புவதற்கு விமானி முயற்சி செய்தார். ஆனால் அதே ஓடு பாதையில் இண்டிகோ விமானம் நிறுத்தப்பட்டிருந்ததைக் கட்டுப்பாட்டு அறையில் இருந்த அதிகாரிகள் கண்டுபிடித்துவிட்ட தாகக் கூறப்படுகிறது.

விவரம்: தமிழ்முரசின் இ-பேப்பரில் பார்க்கவும்