நாகரிகம் தெரியாத ஸ்டாலின்: பன்னீர்செல்வம்

நாகரிகம் தெரியாத ஸ்டாலின்: பன்னீர்செல்வம்

1 mins read
a97d89f7-14f0-4ef1-b90d-60a5968cee22
-

சென்னை: காலஞ்சென்ற முதல் வர் ஜெயலலிதா குறித்து அரசி யல் நாகரிகம் இல்லாமல் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டி உள்ளார். ஜெயலலிதாவின் உருவப் படத்தை அகற்றாவிட்டால் நீதி மன்றம் செல்லப்போவதாக ஸ்டாலின் கூறியிருப்பதற்கு அவர் கடும் கண்டனம் தெரி வித்துள்ளார். "ஜெயலலிதா குறித்து காழ்ப்புணர்ச்சியோடு விமர்ச னம் செய்வது துரதிருஷ்ட வசமானது. ஜெயலலிதாவை தமிழக மக்கள் மனதில் இருந்து அகற்ற முடியாது. எனவே அவரைப் பற்றி விமர்சிப்பதை விட்டுவிட்டு மக்களுக்கு பய னுள்ள வேலையை செய்ய வேண்டும்," என்றார் பன்னீர் செல்வம்.