இந்தியாவின் பல்வேறு பல்கலைக் கழகங்கள், கல்வி நிலையங்களில் படித்துப் பட்டம் பெற்றதுபோல போலியாகக் கல்வி, மதிப்பெண் சான்றிதழ்களை அச்சிட்டு விற்ற நால்வர் கும்பலை போலிசார் குருகிராமில் கைது செய்தனர். நவீன், முகம்மது முஸ்தாக் என்ற இரு ஆடவர்களும் அந்தக் கும்பலின் மூளையாகச் செயல் பட்டதாகவும் தங்களது குற்றச் செயல்களுக்கு உடந்தையாக அனுஷ்கா, பூனம் என்ற இரு பெண்களை அவர்கள் வேலைக்கு வைத்திருந்ததாகவும் போலிஸ் கூறியது. அந்தப் பெண்கள் இருவருக் கும் மாதந்தோறும் ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை ஊதியம் தரப்பட்டது.
போலி கல்விச் சான்றிதழ்கள் விற்பனை; நால்வர் கைது
1 mins read

