புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத் தில் ஹைட்ரோ கார்பன் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தாது என முதலமைச்சர் உறுதி அளித் திருந்தாலும் மக்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட மறுத்து விட்டனர். கொட்டும் மழையிலும் கிராம மக்கள் தங்களது போராட்டத்தை நேற்று 16வது நாளாகத் தொடர்ந் தனர். மழைக்கு நடுவே போராட் டக் களத்தில் பேசிய திமுக செயல் தலைவர் ஸ்டாலின், தாம் இங்கு மக்களின் போராட்டத் திற்கு ஆதரவு தெரிவிக்கவே வந்துள்ளதாகவும் அரசியல் பேசும் எண்ணத்தில் வரவில்லை என்றும் குறிப்பிட்டார். மேலும் மக்களின் இந்த அறப்போராட்டம் வெற்றியடைய வேண்டும் என் பதே தமது எண்ணம் என்றார்.
கொட்டும் மழையிலும் நெடுவாசல் போராட்டம்; ஸ்டாலின் பங்கேற்பு
1 mins read
-

