சென்னை: தமிழக அரசின் செயல்பாடு ஊழலை ஊக்குவிக்கும் வகையில் அமைந்திருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், தமிழக அரசில் எந்த ஒரு பதவியிலும் இல்லாத சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப் பட்ட ஜெயலலிதாவின் படத்தை அரசு விளம்பரத்தில் வெளியிட்டி ருப் பது உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என்றும் அவர் கூறி உள்ளார். "தமிழகத்தில் செயல்படுத்தி முடிக்கப்பட்ட மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் இருப்பதால் மக்கள் பாதிக்கப் பட்டுள்ள தாகவும் அத் திட்டங் களை உடனடியாக செயல்படுத்தா விட்டால், பாமகவினரே அவற் றைத் தொடங்கி வைப்பார்கள் என்றும் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் எச்சரித்திருந்தேன்.
அரசு விளம்பரத்தில் ஜெயலலிதா படம்: உச்சநீதிமன்ற அவமதிப்பு
1 mins read
-

