அமெரிக்காவில் அண்மைய நாட் களில் வெறுப்பு காரணமாக இந்தி யர்கள் தாக்கப்பட்ட சம்பவங்கள் பற்றி வேகமாக விசாரணை நடத் தப்பட்டு நீதி நிலைநாட்டப்படும் என்று அந்த நாடு இந்தியாவிடம் நேற்று உறுதி தெரிவித்தது. அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் நவ்தேஜ் சர்னா அமெரிக் காவின் வெளியுறவு அமைச்சிடம் அண்மைய சம்பவங்கள் தொடர் பாக ஆழ்ந்த கவலை தெரிவித் தார். ஹர்னிஷ் பட்டேல், தீப் ராய் ஆகிய இந்தியர்கள் தொடர்பான சம்பவங்கள் பற்றி அமெரிக்க அரசு சார்பில் கருத்து தெரிவித்த வெளியுறவு அமைச்சு, தான் எல்லா தரப்புகளுடனும் சேர்ந்து செயல்பட்டு வருவதாகவும் வேக மாக நீதி நிலைநாட்டப்படும் எனக் கூறியதாகவும் அந்தத் தூதர் டுவிட்டரில் குறிப்பிட்டார்.
விரைவில் நீதி: இந்தியாவிடம் யுஎஸ் உறுதி
1 mins read

