பிருந்தாவனில் ஹோலி கொண்டாடிய விதவைகள்

பிருந்தாவனில் ஹோலி கொண்டாடிய விதவைகள்

1 mins read
f61f44be-a24e-41e7-a299-7df8a1c7166d
-

சுலப் இன்டர்நேஷனல் எனும் அரசுசாரா அமைப்பின் நிறுவனரும் சமூக ஆர்வல ருமான பிந்தேஷ்வர் பதக் ஏற்பாடு செய்திருந்த ஹோலி கொண்டாட்டத்தில் விதவைகள் பலர் கலந்துகொண்டனர். பிருந்தாவனில் உள்ள 400 ஆண்டுகள் பழமையான கிருஷ்ணன் கோவிலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் வாரணாசியைச் சேர்ந்த பல விதவைகளும் பங்கேற்றனர். வெள்ளை நிறச் சேலையில் இருந்த அவர்கள் பல வண்ணப் பொடிகளை ஒருவர்மீது ஒருவர் அள்ளி வீசிக் கொண்டாடினர். கணவரை இழந்தவர்கள் வெள்ளை நிற ஆடையை மட்டுமே அணிய வேண்டும் என்றிருந்த பழங்கால வழக்கத்தை இந்த நிகழ்வு உடைத்திருப்பதாக திரு பதக் கூறினார். படம்: ராய்ட்டர்ஸ்