சென்னை. சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி 18-ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி அரசுக்கு ஆதரவாக நடந்த நம்பிக்கை வாக்கெடுப்புத் தொடர்பிலான வழக்கில், நம்பிக்கை வாக்கெடுப்பின்போது திமுகவினர் வெளியேற்றபட்டது குறித்து பதில் மனு தாக்கல் செய்ய சட்டசபைச் செயலாளருக்கு இரண்டு வார காலம் அவகாசம் அளிக்கப் பட்டுள்ளது. இது குறித்து விளக்கம் அளிக்க திமுகவுக்கும் உத்தரவிடப்படுள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பு காட்சிகளைக் காட்டும் காணொளியைத் தாக்கல்செய்யும் படியும் அதை திமுகவுக்குக் கொடுக்கும்படியும் சென்னை உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு
1 mins read

