நெடுவாசல் போராட்டம் ஒத்திவைப்பு

நெடுவாசல் போராட்டம் ஒத்திவைப்பு

1 mins read
1f851a67-af38-42b0-8c59-01abee8c5ae7
-

புதுக்கோட்டை: நெடுவாசலில் நடந்து வந்த போராட்டம், மத்திய, மாநில அரசுகளின் வேண்டுகோளை ஏற்று தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று போராட்டக் குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனை எதிர்த்து கடந்த 22 நாட்களாக நெடுவாசலில் இரவு பகலாக போராட்டம் நடந்துவந்தது. இதனிடையே மத்திய அரசு சார்பில் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் நெடுவாசல் சென்று போராட்டக் குழுவினரிடையே பேச்சுவார்த்தை நடத்தினார். அதேபோல் தமிழக அமைச்சர்களும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதனையடுத்து மக்கள் விருப்பத்திற்கு மாறாக ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்பட மாட்டாது என்று மத்திய, மாநில அரசுகள் தெரிவித்ததை அடுத்து நெடுவாசல் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

முழுவிவரம்: epaper.tamilmurasu.com.sg