சென்னை: சசிகலாவின் கண வர் நடராஜனையும் மூத்த சகோதரர் திவாகரனையும் எக்காரணத்தை முன்னிட்டும் கட்சியில் சேர்க்கப்போவ தில்லை என அதிமுக துணைப் பொதுச்செயலர் டிடிவி தினக ரன் திட்டவட்டமாக தெரிவித் துள்ளார். அவர் அளித்துள்ள அண் மைய பேட்டி ஒன்றில், நடராஜன் கூறுவது அனைத்தும் அவரது சொந்தக் கருத்து என்றும் அவற்றுக்கு அதிமுக பொறுப் பேற்காது என்றும் கூறியுள்ளார். சசிகலா சிறைக்குச் சென் றதை அடுத்து அவரது குடும் பத்துக்குள் அதிகார மோதல்கள் தலைதூக்கி உள்ளன. குறிப்பாக சசிகலாவின் கணவர் நடராஜன் உட்பட அனைத்துக் குடும்ப உறுப்பினர்களையும் புறக் கணித்து வருகிறார் தினகரன். கட்சியும் ஆட்சியும் தற்போது தினகரனின் கட்டுப்பாட்டில் இருப்பதாக தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சசிகலா குடும்பத்தாரை மொத்தமாக ஒதுக்கும் தினகரன்
1 mins read

