விரைவில் அறிமுகமாகிறது போத்தல் இளநீர்

விரைவில் அறிமுகமாகிறது போத்தல் இளநீர்

1 mins read
386ff3c6-89bd-438c-97c7-567738c4bfcc
-

உடுமலை: தமிழகத்தில் தற்போது பன்னாட்டுக் குளிர்பானங்களை இனி விற்பனை செய்வதில்லை என வணிகர் சங்கங்கள் முடி வெடுத்துள்ளன. இந்நிலையில் இளநீரை புட்டிகளில் அடைத்து விற்பனை செய்யப் போவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர். இது தொடர்பாக உடுமலையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத் தில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய, இந்திய விவசாயிகள் சங்க கூட்ட மைப்பு நிர்வாகி நீரா நா.பெரியசாமி, கோடை காலம் மட்டுமின்றி எல்லா வித காலநிலைகளுக்கும் ஏற்ற பானம் இளநீர் என்றார். "தமிழகத்தில் பொள்ளாச்சி, உடுமலை பகுதிகளில் அதிக அளவு தென்னை சாகுபடி பரப்பு உள்ளது. தற்போது நிலவும் கடும் வறட்சியால், 7 மடங்கு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. பன்னாட்டுக் குளிர்பானங்களுக்கு எதிரான அலை வீசத் தொடங்கி யுள்ளதை வரவேற்கிறோம்.