சென்னை: முதல்வர் பதவியில் ஓ.பன்னீர்செல்வம் சிறப்பாகச் செயல்பட்டார் என காவல்துறை முன்னாள் டிஜிபி திலகவதி பாராட்டு தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் பன்னீர்செல்வம் அணியில் இணைந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஓபிஎஸ் அணியால்தான் தமிழகத்துக்கு நல்லது நடக்கும் என்றார். "பொது சேவை செய்ய, ஏதேனும் ஒரு கட்சியில் சேர வேண்டும். எந்தக் கட்சியில் சேருவது என்ற குழப்பம் ஏற்பட்டது. ஜெயலலிதா சமாதியில் அமர்ந்து, பன்னீர்செல்வம் தியானம் செய்த போது, அவர் மீது மரியாதை ஏற்பட்டது," என்றார் திலகவதி.
முதல்வராக சிறப்பாகச் செயல்பட்டார் ஓபிஎஸ்: திலகவதி பாராட்டு
1 mins read

