பஞ்சாப்: பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியின் சார்பாக அமரிந்தர் சிங் அம்மாநில முதல்வராகப் பொறுப்பேற்றார். ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது. அதேசமயம், பஞ்சாப் மாநிலத்தில் அகாலி தளம்=பாஜக கூட்டணி, காங்கிரசிடம் ஆட்சியை இழந்தது. பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்களின் கூட்டம் சண்டிகரில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் கட்சியின் சட்டப் பேரவைத் தலைவராக அமரிந்தர் சிங் தேர்வு செய்யப்பட்டார்.
பஞ்சாப் முதல்வரானார் அமரிந்தர் சிங்
1 mins read

