மத்திய அமைச்சர் மீது காலணி வீச்சு: இளைஞர் கைது

மத்திய அமைச்சர் மீது காலணி வீச்சு: இளைஞர் கைது

1 mins read

சேலம்: மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் மீது காலணி வீசப்பட்ட தால் சேலத்தில் பரபரப்பு நிலவியது. டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆய்வுப் படிப்பு படித்து வந்த மாணவர் முத்து கிருஷ்ணன் கடந்த திங்கட்கிழமை உயிரை மாய்த்துக் கொண்டார். இதையடுத்து அவரது உடல் சொந்த ஊரான சேலம் மாவட்டம், சாமிநாதபுரத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு ஏராளமானோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர் களிடம் பேசுவதற்காக அவர் காத்திருந்தபோது, திடீரென இளைஞர் ஒருவர் அமைச்சர் மீது காலணி ஒன்றை வீசினார். எனினும் அது அமைச்சர் மீது படாமல், அவருக்கு முன்பு இருந்த மைக் மீது விழுந்தது.