ஓபிஎஸ்: கட்சியும் சின்னமும் விரைவில் எங்கள் வசமாகும்

ஓபிஎஸ்: கட்சியும் சின்னமும் விரைவில் எங்கள் வசமாகும்

1 mins read
ab3f0176-5441-4cae-8327-c598c45edfc0
-

பெரியகுளம்: சசிகலா தரப்பு அதிமுகவின் துணைப் பொதுச் செயலரான டிடிவி. தினகரன் தற்போது தேர்தலில் நிற்பது என்பது அதிமுக விதிமுறைக ளுக்கு முரணானது என முன் னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். பெரியகுளத்தில் செய்தியாளர் களிடம் பேசிய அவர், அதிமுகவும், இரட்டை இலை சின்னமும் விரைவில் தங்கள் வசமாகும் என நம்பிக்கை தெரிவித்தார். "மத்திய தேர்தல் ஆணையத் திடம் எங்கள் தரப்பு நியாயங்களை எடுத்துக் கூறியுள்ளோம். அதன் தொடர்ச்சியாக ஆணையம் சில விவரங்களைக் கேட்க எங்களை நேரில் அழைத்துள்ளனர். அவர்க ளிடம் சென்று சட்ட விதிகளின்படி எங்கள் தரப்பில் உள்ள நியா யங்களை எடுத்துரைப்போம்.

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் படம்: ஊடகம்