பல்கலைக்கழக சான்றிதழ்களில் இனி புகைப்படமும் ஆதார் எண்ணும் கட்டாயம்

பல்கலைக்கழக சான்றிதழ்களில் இனி புகைப்படமும் ஆதார் எண்ணும் கட்டாயம்

1 mins read

புதுடெல்லி: நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக் கழகங்களுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. அனைத்துப் பல்கலைக் கழகங்களுக்கும் அனுப்பி உள்ள உத்தரவில் "பட்டப்படிப்புச் சான்றிதழ் களிலும், மதிப்பெண் சான்றிதழ்களிலும் மாணவ, மாணவியரின் புகைப்படத்தை- யும், ஆதார் எண்ணையும் இடம்பெறச்செய்ய வேண்டும்," என்று கூறப் பட்டுள்ளது. மேலும் "மாணவ, மாணவியர் படித்த கல்வி நிறுவனத்தின் பெயரையும் சான்றிதழ்களில் வெளியிடவேண்டும்," என்றும் தெரிவிக்கப்பட் டுள்ளது. சான்றிதழ்களில் இப்படி பாதுகாப்பு அடையாள அம்சங்களை ஏற்படுத்துவது போலிகளைத் தடுக்கவும் பரிசோதனையை எளிதாக்கவும் உதவும் எனவும் கூறப்பட்டுள்ளது.