ஸ்டாலின் முதல்வர்: துரைமுருகன் கனவு

ஸ்டாலின் முதல்வர்: துரைமுருகன் கனவு

1 mins read

சென்னை: சென்னை ஆர்.கே.நகர் தொகுதி திமுக தேர்தல் அலுவ லகத்தில் அனைத்துக் கட்சி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற் றது. இதில் கலந்துகொண்டு திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் பேசுகையில், "ஆர்.கே.நகர் தொகுதியில் இதற்கு முன்பு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வெற்றி பெற்றிருந்தார். அவர் இறந்ததால் இடைத்தேர்தல் வந்துள்ளது. "ஜெயலலிதா இதற்கு முன்பு பர்கூரிலும் ஸ்ரீரங்கத்திலும் போட்டியிட்டார்.

அவர் முதலமைச்சரான பிறகும் அந்த தொகுதிகள் முன் னேற்றம் அடையவில்லை. ஜெயலலிதா இறந்த மூன்று மாதத்தில் அதிமுக மூன்றாக உடைந்துவிட் டது. மேலும் கட்சியின் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டுள் ளது. அதிமுக கட்சி பெயரையும் தேர்தல் ஆணையம் முடக்கிவிட் டது. "இந்த நிலையில் அதிமுகவில் மூன்று பிரிவாக ஆர்.கே.நகரில் போட்டியிடுகிறார்கள். இவர்கள் மக்களுக்காக என்ன செய்துவிடப் போகிறார்கள். ஒருவர் மீது ஒருவர் வீண்பழிதான் சுமத்துகின்றனர். மக்களைப் பற்றி சிறிதும் சிந்திப்பதில்லை.