சென்னை: கடும் குடிநீர் பஞ்சம் காரணமாக சென்னை மாநகர மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். சென்னையின் பல்வேறு பகுதிக ளில் ஒரு குடம் தண்ணீர் பத்து ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனால் குழந்தைகள் கூட குடிநீரை அளந்து குடிக்க வேண்டி யுள்ளதாக ஏழை, நடுத்தர வர்க்க மக்கள் புலம்புகின்றனர். கடந்த ஆண்டு தமிழகத்தில் பருவ மழை பொய்த்துப் போனது. இதனால் ஏரி, குளங்கள் உள்ளிட்ட அனைத்து நீர்நிலைகளும் வறண்டுவிட்டன. விவசாயத்திற் குக் கூட போதுமான தண்ணீர் இல்லை. இதனால் விவசாயம் பாதிக்கப் பட்டு பல விவசாயிகள் உயிரை மாய்த்துக் கொண்டதாகக் கூறப் படுகிறது. இந்நிலையில், கோடை காலம் துவங்கும் முன்பே, தமிழகத்தில், குறிப்பாக சென்னை யில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
சென்னையில் கடும் குடிநீர்ப் பஞ்சம்: ஒரு குடத்தின் விலை ரூ.10
1 mins read

