இந்தியாவில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பின்னர் 200 தனிநபர்களும் நிறுவனங்களும் கணக்கில் வராத 600 கோடி ரூபாயை தமிழ்நாடு, புதுச்சேரி வங்கிகளில் செலுத்தி இருப்பதாக இப்போது தகவல் வெளியாகி உள்ளது. அவர்களில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சேர்ந்த தனிநபர் ஒருவர் 246 கோடி ரூபாயை (சுமார் 50 மில்லி யன் சிங்கப்பூர் வெள்ளி) இந்தி யன் ஓவர்சீஸ் வங்கியின் ஊரகக் கிளை ஒன்றில் செலுத்தி உள் ளார். "கிட்டத்தட்ட 15 நாட்கள் அந்த நபரைப் பின்தொடர்ந்தோம். முதலில் பணம் தொடர்பான விவ ரங்களை மறைத்த அவர், அடுத்த சில நாட்களில் தமது பணம் என்று ஒப்புக்கொண்டு பிரதமரின் எளியோர் திருமணத் திட்டத்தில் இணைந்து, தமது மொத்த பணத் தில் 45 விழுக்காட்டை வரியாகச் செலுத்த முன்வந்தார்," என்று வருமானவரித்துறை மூத்த புல னாய்வு அதிகாரி தெரிவித்தார்.
தமிழகம்: ரூ.246 கோடி செல்லாத நோட்டைச் செலுத்தியவர்
1 mins read

