சென்னை: இடைத்தேர்தல் நடை பெற உள்ள ஆர்கே நகர் தொகுதி யில் மதுபான விற்பனை அமோக மாக உள்ளதாக தமிழக ஊடகங் கள் தெரிவிக்கின்றன. பிரசாரத்துக்காக அத்தொகு தியைச் சேர்ந்த அரசியல் கட்சி யினர், கடந்த சில நாட்களாகக் குவிந்துள்ள வெளியூர்க்காரர்கள் எனப் பலரும் டாஸ்மாக் மதுக் கடைகளிலும் மதுக்கூடங்களிலும் குவிகின்றனர். தினமும் மதியம் 12 மணிக்கு மதுக்கடை திறக்கப்படும்போதே சிலர் மது வாங்க காத்துக் கிடக்கி றார்கள். கடை திறக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே கூட்டம் குவிந்து, விற்பனையும் களைகட்டு கிறது. கோடை வெயிலும் வறுத்தெடுப்பதால் பீர் பிரியர்களும் வரத் தொடங்கி விடுகின்றனர்.
மதுக்கடைகளில் அலைமோதும் கூட்டம்
1 mins read
-

