விலங்கு வர்த்தக உரிம விதிமுறைகள் கடுமையாகும்

விலங்கு வர்த்தக உரிம விதிமுறைகள் கடுமையாகும்

1 mins read

செல்லப் பிராணிகள் விற்கும் கடைகளும் பண்ணைகளும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் கடுமையான உரிம விதிமுறை- களுக்கு உட்படுத்தப்பட உள்ளன. இந்தப் புதிய விதிமுறைகளின்படி, விலங்குகள் பராமரிப்பும் தங்கு- மிடமும் மேம்படுத்தப்படும். அதோடு விலங்குகள் காணாமல் போனால் அவற்றைத் தேடி கண்டுபிடிக்கும் சாத்தியமும் செல்லப் பிராணி வர்த்தகத்தின் நம்பகத்தன்மையும் மேம்படுத்தப்- படும் என வேளாண்=உணவு, கால்நடை மருத்துவ ஆணையம் (ஏவிஏ) நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது. புதிய விதிமுறைகளின் கீழ் உள்ள மாற்றங்களை ஆணையம் பட்டியலிட்டது. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாய்கள் ஒன்றாக வைக்கப்பட்டு இருந்தால் அவை ஒன்றோடு ஒன்று ஒத்துப் போகக் கூடியவையாக இருக்க வேண்டும். ஒவ்வொரு நாயும் கூண்டின் ஓரங்களை இடிக்காமல் திரும்பவும், நிமிர்ந்து நிற்கவும், படுக்கவும், கால்களை நீட்டவும் முடிய வேண்டும்.