குடிமராமத்து என்ற பெயரில் சவுடு மண் கொள்ளை: ராமதாஸ் புகார்

குடிமராமத்து என்ற பெயரில் சவுடு மண் கொள்ளை: ராமதாஸ் புகார்

1 mins read

சென்னை: எந்தத் திட்டத்தைச் செயல்படுத்தினாலும், ஆளுங் கட்சியினரும் அதிகாரிகளும் கூட்டணி அமைத்து அதில் ஊழல் செய்ய துடிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டி உள்ளார். இதன் காரணமாக குடிமரா மத்து போன்ற பயனுள்ள நல்ல திட்டங்களின் பயன்கள் மறைந்து பாதகங்கள் மட்டுமே ஏற்படுவதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார். "குடிமராமத்து என்ற பெயரில் ஏரிகளைத் தூர்வாரும் திட்டத்தில் சவுடு மண் கொள்ளை நடக்கிறது. நல்ல நோக்கத்துடன் மேற்கொள் ளப்படும் பணிகளில் ஊழலையும் கொள்ளையையும் புகுத்தி இயற்கை வளங்களை அழிப்பதில் தமிழக ஆட்சியாளர்களுக்கு ஈடு இணை யாருமில்லை.