3,000 தமிழக விவசாயிகள் டெல்லி செல்வதற்குத் திட்டம்

3,000 தமிழக விவசாயிகள் டெல்லி செல்வதற்குத் திட்டம்

1 mins read
6d6428d2-df45-4097-b421-c0db06dc69c2
-

சென்னை: பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழக விவசாயிகளுக்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் ஆதரவு பெருகி வருகிறது. இந்நிலையில் ஏற்கெனவே டெல்லி யில் குவிந்துள்ள விவசாயிக ளுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக மேலும் 3.000 தமிழக விவசாயிகள் டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளனர். இத்தகவலை திருவண்ணா மலை, விழுப்புரம் மாவட்ட விவசா யிகள் செய்தியாளர்களிடம் தெரிவி த் தனர். கடந்த 17 நாட்களாக தமிழக விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளு படி உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு உத்தரபிர தேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட பிற மாநில விவசாயிகளின் ஆதரவும் கிடைத்துள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நாகை விவசாயிகள். படம்: ஊடகம்