சென்னை: திருநங்கை ஒருவர் நாட்டிலேயே முதன் முறையாக காவல்துறை உதவி ஆய்வாளரராக தேர்வாகியுள்ளார். அவர் தமது ஓராண்டு பயிற்சியை நிறைவு செய்துள்ளார். பிரித்திகா யாஷினி என்ற அந்த திருநங்கைக்கு தர்மபுரி பகுதியில் பணி வழங்கப்பட்டுள் ளது. இவர் கடந்த ஓராண்டாக சென்னையில் உள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் பயிற்சி பெற்று வந்தார். அவருக்கு பயிற்சி அளித்த உயர் அதிகாரி கள், சக பயிற்சியாளர்கள் என அனைவரும் முழு ஒத்துழைப்பு அளித்தனர். இதையடுத்து அவர் பயிற்சியை வெற்றிகரமாக முடித்து பணியிலும் சேர்ந்துள்ளார். அவருக்குப் பல்வேறு தரப்பி னரும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
காவல்துறை அதிகாரியாக முதல் திருநங்கை
1 mins read
-

