தமிழக மீனவர்கள் 25 பேரை ஈரான் கடற்படை கைது செய்தது

தமிழக மீனவர்கள் 25 பேரை ஈரான் கடற்படை கைது செய்தது

1 mins read

கன்னியாகுமரி: தங்கள் நாட்டு கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 25 பேரை ஈரான் கடற்படை கைது செய்துள்ளது. குமரி மாவட்டத்தைச் சேர்ந்த அம்மீனவர்கள் பஹ்ரைனில் பணியாற்றி வந்தனர். அண்மையில் மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற அவர்கள் ஈரான் கடற்படையிடம் சிக்கியுள்ளனர். கைதானவர்களுக்கு உணவும் குடிநீரும் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், அனைத்துலக மீனவர் வளர்ச்சி வாரியத்தின் தலைவரின் கவனத்துக்குத் தமிழக மீனவர்கள் தங்கள் நிலை குறித்த தகவல்களைக் கொண்டு சென்றுள்ளனர்.