ஆர்கே நகர் இடைத்தேர்தல் ரத்து ஒரு கூட்டுச் சதி - தினகரன்

ஆர்கே நகர் இடைத்தேர்தல் ரத்து ஒரு கூட்டுச் சதி - தினகரன்

1 mins read

சென்னை ஆர்கே நகர் சட்ட மன்றத் தொகுதிக்கு நாளை நடக்கவிருந்த இடைத்தேர்தலை ரத்து செய்தது ஒரு திட்டமிட்ட நாடகம் என்று அதிமுக அம்மா அணியின் வேட்பாளரான டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மறைவை அடுத்து ஆர்கே நகரில் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் அதிமுக அம்மா அணி சார்பில் டிடிவி தினகரன், அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணி சார்பாக மதுசூதனன், திமுக சார்பில் மருதுகணேஷ் உள்ளிட்ட 62 பேர் வேட்பாளர் களாகக் களமிறங்கினர். தமிழகத்தைப் பொறுத்தவரை, இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சியே வென்று வந்திருக்கிறது. ஆயினும், வெற்றி பிறர் வசம் போய்விடக்கூடாது என்பதில் தினகரன் தரப்பு குறியாக இருந்தது. இதனால், வாக்குக்கு ரூ.4,000 என்ற கணக்கில் தொகுதி வாக்காளர்கள் அனை வருக்கும் பணம் தர தினகரன் தரப்பு திட்டமிட்டிருந்ததாகச் சொல்லப்பட்டது. வாக்காளர் களுக்குப் பணம் தரும் சில காணொளிகளும் ஊடகங்களில் வெளியாகின.