தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எட்டு ரயில் பெட்டிகள் கவிழ்ந்து விபத்து

1 mins read
94a2726a-8353-4dc7-ae21-a235f5020a95
-

உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூரில் விரைவு ரயில் விபத்துக்குள்ளான தில் எட்டு ரயில் பெட்டிகள் தடம்புரண்டன. மீரட்டில் இருந்து லக்னோ நோக்கிச் சென்ற ராஜ்ய ராணி விரைவு ரயில் நேற்று அதிகாலை தடம் புரண்டது. இந்த விபத்தில் உயிரிழப்புகள் பற்றி தகவல் வெளியாகவில்லை. இருப்பினும் இருவர் படுகாயமடைந்துள்ளதாக வடக்கு ரயில்வே பேச்சாளர் தெரிவித்தார். காயமடைந்தவர்களுக்கு உதவித்தொகை வழங்க முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தர விட்டுள்ளார். படம்: இந்திய ஊடகம்