மும்பை: சென்னை, மும்பை, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் உள்ள முக்கிய விமான நிலை யங்களில் விமானங்களைக் கடத்தி தாக்குதல் நடத்த பயங்க ரவாதிகள் திட்டமிடுவதாக பாது காப்பு முகமைகளுக்கு தகவல் கிடைத்து உள்ளது. அதனை யடுத்து மேற்கண்ட நகரங்களின் விமான நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்று பிடிஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. சென்னை, ஹைதராபாத், மும்பை ஆகிய விமான நிலை யங்களில் விமானத்தைக் கடத்தித் தாக்குதல் நடத்தப்போவதாக மும்பை விமான நிலையத்திற்கு பெண் ஒருவரிடமிருந்து எச்சரிக் கைக் கடிதம் வந்தது. அதனைய டுத்து இந்த விமான நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
விமானக் கடத்தல் மிரட்டல்: சென்னை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு
1 mins read

