பொய்யான வாக்குறுதிகளை அளித்து வருகிறார் பிரதமர் மோடி: பிருந்தா காரத்

பொய்யான வாக்குறுதிகளை அளித்து வருகிறார் பிரதமர் மோடி: பிருந்தா காரத்

1 mins read

நெல்லை: பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்குப் பொய்யான வாக்குறுதிகளை அளித்து வருவ தாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் தலைமை குழு உறுப் பினர் பிருந்தா காரத் குற்றம்சாட்டி உள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று முன்தினம் நெல்லையில் தாமிரபரணிக் கரை யில் தண்ணீரில் இறங்கும் சத்தி யாகிரக போராட்டம் நடந்தது. தாமிரபரணி ஆற்றிலிருந்து வெளிநாட்டு குளிர்பான நிறுவ னங்களுக்குத் தண்ணீர் வழங்கு வதைக் கண்டித்தும், அதற்கான அனுமதியை ரத்து செய்யக் கோரி யும் நடைபெற்ற இந்தப் போராட் டத்தில் பிருந்தா பங்கேற்றார். அப்போது பேசிய அவர், இந்தியாவின் இயற்கை வளங் களை பிரதமர் மோடி பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கிறார் என்று சாடினார்.