சூரத்: தனது கிராம மக்கள் தண்ணீர் பஞ்சத்தால் இனி கவலைப்படக் கூடாது என விரும்பும் வைர வியாபாரி ஒருவர் தண்ணீர் பஞ்சத்தை போக்க புதிதாக 200 ஏரிகளை வெட்டி வருகிறார். குஜராத் மாநிலம், சூரத்தைச் சேர்ந்த வைர வியாபாரி சவ்ஜி துலாகியா. அம்ரேலி மாவட்டத் தில் உள்ள தனது சொந்த ஊரான துத்ஹாலா கிராம மக்கள் தண்ணீரின்றி வறட்சி யால் தவிப்பதை போக்க புதி தாக ஏரிகளை வெட்டி வரு கிறார். ஒட்டுமொத்தமாக 20 கிராமங்களைச் சேர்ந்த 80,000 மக்கள் பயன்பெறும் வகையில் 200 ஏரிகளை உருவாக்க இரவு, பகல் பாராமல் லாரிகள், புல்டோசர்கள் இயங்கி வருகின் றன. நாள் ஒன்றுக்கு வாகன கட்டணம், தொழிலாளர் கூலி என ரூ.2 லட்சம் செலவு செய்து வருகிறார்.
தண்ணீர் பஞ்சத்தை தீர்க்க 200 ஏரிகளை வெட்டும் வைர வியாபாரி
1 mins read

