சென்னை: தமிழகத்தில் நேற்று முதல் அக்னி நட்சத்திர காலம் தொடங்கியுள்ளது. எனவே வரும் நாட்களில் வெயிலின் தாக் கம் கடுமையாக இருக்கும் என வானிலை நிபுணர்கள் எச்சரித் துள்ளனர். கூடுமான வரை பகல் நேரத்தில் தேவையின்றி வெளியே செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். நேற்று தொடங்கிய அக்னி நட்சத்திரம் இம்மாதம் 28ஆம் தேதி வரை நீடிக்க உள்ளது. இதையடுத்து வெயில் காலத்துக்கு ஏற்ற பழங்கள், பானங்களின் விற்பனை வெகுவாக அதிகரித்துள்ளது. பூங்காக்கள், கடற்கரையில் மாலை வேளையில் மக்கள் கூட்டம் களைகட்டுகிறது.
தொடங்கியது அக்னி நட்சத்திரம்: 28ஆம் தேதி வரை நீடிக்கும்
1 mins read

