இந்திய, இலங்கை அரசுகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

இந்திய, இலங்கை அரசுகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

1 mins read
ae9a5c1f-c565-43ef-a332-49bad521dbf5
-

இலங்கையில் இனப்படுகொலை தொடர்ந்து நடைபெற்று வருவதாக தமிழர் விடியல் கட்சி குற்றம்சாட்டி உள்ளது. இலங்கையின் இந்த நடவடிக்கைக்கு இந்தியாவும் துணை நிற்பதாகச் சாடியுள்ள அக்கட்சியினர் நேற்று சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். அப்போது இலங்கையில் இறுதிப்போர் நடைபெற்ற மே மாதத்தை இனி போராட்டங்களுக்கான மாதம் என அறிவிக்கப் போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். படம்: சதீஷ்