தமிழகத்தின் நாகர்கோவிலில் நேற்று தொடங்கிய 'திருக்குறள் அனைத்துலக மாநாட்டில்' திருக்குறளை 'உலகப் புத்தக'மாக யுனெஸ்கோ அறிவிக்க வேண்டும் என்று தீர்மானம் இயற்றப்படவுள்ளது. ஸ்காட் கிறிஸ்துவக் கல்லூரியில் நடக்கும் இந்த மூன்று நாள் மாநாட்டில் 130 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட உள்ளன. 20 நாடுகளைச் சேர்ந்த தமிழறிஞர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர். "மாநாட்டில் 550 பக்கங்கள் கொண்ட நினைவு மலர் வெளியிடப்படும். அடுத்த திருக்குறள் மாநாட்டை 2020ல் பாரிசில் உள்ள யுனெஸ்கோ வளாகத்தில் நடத்தத் திட்ட மிட்டுள்ளோம்," என்றார் ஆசிய ஆய்வுக் கழகத்தின் இயக்குநர் டாக்டர் ஜி.ஜான் சாமுவேல்.
'திருக்குறளை உலகப் புத்தகமாக அறிவிக்கவும்'
1 mins read

