குல்பூஷண் சிங் ஜாதவ் வழக்கில் இறுதித் தீர்ப்பு அளிக்கும்வரை தூக்குத் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று பாகிஸ்தான் அரசுக்கு அனைத்துலக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அவரை இந்தியத் தூதரக அதிகாரிகள் சந்திக்க அனுமதி மறுத்தது தவறு என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார். இந்திய கடற்படையில் அதிகாரியாக பணியாற்றிய ஜாதவ் பாகிஸ்தானை வேவு பார்த்ததாகவும் பயங்கரவாதத் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியதாகவும் குற்றம்சாட்டி அவருக்கு மரண தண்டனை விதித்தது பாகிஸ்தான். ஜாதவின் தண்டனையை ரத்து செய்யக் கோரி நெதர்லாந்தில் உள்ள அனைத்துலக நீதிமன்றத்தில் இந்தியா செய்த மனுவின் தீர்ப்பை நேற்று 11 நீதிபதிகள் கொண்ட குழு வழங்கியது.
ஜாதவின் மரண தண்டனையை நிறுத்திவைக்க உத்தரவு
1 mins read

