கடுகு மரபணு மாற்றத்திற்கு எதிராகப் பேரணி

கடுகு மரபணு மாற்றத்திற்கு எதிராகப் பேரணி

1 mins read
f4373bd3-80a5-44c9-be87-933ed75132dc
-

'மரபணு மாற்றுப் பயிரை இந்தியாவில் அனுமதிக்கக் கூடாது' என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக மரபணு மாற்றப்பட்ட கடுகுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில், சென்னை, பெசன்ட் நகரில் நேற்று முன்தினம் இயற்கை ஆர்வலர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்று கூடி மரபணு மாற்றப்பட்ட கடுகுக்கு எதிராகப் பேரணி நடத்தினர். இதில், இயற்கை ஆர்வலர் பியூஷ் மானுஷ், நடிகை ரோகினி, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தங்கபாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். படம்: தகவல் ஊடகம்