மதுரையில் நிகழ்ந்த கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி தமிழக அரசிடம் அளித்த விசாரணை அறிக்கையை வெளியிடக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மதுரைப் பிரிவு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சகாயம் தனது அறிக்கையை அளித்து 2 ஆண்டுகள் ஆகின்றன. அதன் விவரங்களை வெளியிட அரசு தயங்குவதால் பல்வேறு உண்மைகள் மூடி மறைக்கப்படுமோ எனும் சந்தேகம் எழுவதாக விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலர் சண்முகம் கூறினார். எனவேதான் ஆர்ப்பாட்டம் நடைபெறுவ தாகவும் அவர் மேலும் தெரிவித்தார். படம்: தகவல் ஊடகம்
சகாயம் அறிக்கையை வெளியிடக் கோரி ஆர்ப்பாட்டம்
1 mins read
-

