சென்னை: தமிழகத்தின் நடப்பு அரசியல் சூழலை எவ்வாறு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது தொடர்பில் காங்கிரசாருக்கு அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார். தமிழகத்தில் உள்ள சூழ்நிலை காங்கிரசுக்கு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தித் தந்துள்ளதாக மாநில நிர்வாகிகளுடனான நேரடிச் சந்திப்பின் போது அவர் கருத்துரைத்தார். தமிழக அரசியல் நிலவரம், காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள், கட்சி வளர்ச்சி குறித்து அவர் விரிவான ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
தமிழக அரசியல் சூழ்நிலை: ராகுல் வழங்கிய ஆலோசனைகள்
1 mins read

