கோவையில் செல்வ சிந்தாமணி குளத்தை தூய்மைப்படுத்திய சமூக ஆர்வலர்கள்

கோவையில் செல்வ சிந்தாமணி குளத்தை தூய்மைப்படுத்திய சமூக ஆர்வலர்கள்

1 mins read
eb0708ef-7b24-4e31-bc16-0aa548f82ad3
-
Google News Preferred Icon

தூய்மை இந்தியா திட்டம் குறித்து தற்போது அதிகம் பேசப்படாவிட்டாலும், அந்த நல்ல காரியத்தை ஒருசிலர் தொடர்ந்து செய்துகொண்டு தான் இருக்கிறார்கள். அந்த வகையில் கோவையில் உள்ள செல்வ சிந்தாமணி குளப் பகுதியைத் தூய்மைப்படுத்தும் பணி நேற்று முன்தினம் நடைபெற்றது. காலை 6 மணிக்குத் தொடங்கிய இப்பணி மூன்று மணி நேரம் நீடித்ததில், மூன்று சிறிய ரக டிரக் வாகனங்கள் நிறையும் அளவுக்கு குப்பைக்கூளங்கள் அகற்றப்பட்டன. சமூக ஆர்வலர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் இப்பணியில் ஈடுபட்டனர். படம்: தகவல் ஊடகம்