நெல்லை: மணல் அள்ளுவதில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக அளிக்கப் பட்ட புகாரின் பேரில், நாங்குநேரி அருகே உள்ள மறுகால்குறிச்சி ஊராட்சி முன்னாள் தலைவர் உதயகுமாரை போலிசார் கைது செய்த னர். இதையடுத்து அவரை நாங்குநேரி நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்த அழைத்துச் சென்றனர். அப்போது அவரது ஆதரவாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் போலிஸ் வாகனத்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்த முயன்றபோது இரு காவலர் கள் காயமடைந்தனர். இந்நிலையில் மர்மக் கும்பல் உதயகுமாரைக் கடத்திச் சென்றது. இதையடுத்து நூறு பேர் மீது போலிசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
போலிசை தாக்கி கைதி கடத்தல்
1 mins read

