800,000 பேருடன் அமைதிப் பேரணி

800,000 பேருடன் அமைதிப் பேரணி

1 mins read
8c4e545c-634e-4907-81a6-3f708ab46cb3
-

மும்பையில் சுமார் 800,000 பேர் கலந்துகொண்ட பிரம்மாண்ட அமைதிப் பேரணி நடந்தது. இதனால் மும்பையின் பல பகுதிகளில் வாகன, ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பாதுகாப்புப் பணியில் 10,000 போலிசார் ஈடுபட்டனர். அரசு வேலை வாய்ப்பு, கல்வி ஆகியவற்றில் இட ஒதுக்கீடு, விவசாய விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் போன்ற பல கோரிக்கைகளை வலியுறுத்தி மராத்தா கிராந்தி மோர்ச்சா அமைப்பினர் நடத்திய இந்தப் பேரணியை அடுத்து அவர்களது முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்ற அம்மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஒப்புதல் அளித்தார். படம்: ஏஎஃப்பி.