சென்னை: தமிழகத்தில் நீட் தேர்வு அடிப்படையில் மருத் துவ மாணவர் சேர்க்கையை உடனே தொடங்க வலியு றுத்தி உச்சநீதிமன்றத்தில் மாணவர்கள் தரப்பில் வழக்கு தொடுக்கப்பட் டுள்ளது. இந்த வழக்கு விசார ணையின் போது, நீட் விவ காரத்தில் தமிழகத்தின் செயல்பாட்டை ஏற்க முடி யாது என்று இந்திய மருத் துவ கவுன்சில் கருத்து தெரிவித்தது. மேலும், தமி ழக அரசின் நீட் விலக்கு அவசர சட்டத்துக்கும் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தது. இதற்கிடையே நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்தக் கூடாது என்று வலியுறுத்தி தமிழகத்தைச் சேர்ந்த அனிதா என்ற மாணவி உச்சநீதிமன்றத்தை அணுகி யுள்ளார். இதற்கிடையே நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அர சுக்கு ஓராண்டு விலக்கு அளிக்கப்பட்டதை நடிகர் கமல் வரவேற்றுள்ளார்.
தமிழகத்துக்கு மருத்துவ கவுன்சில் கடும் எதிர்ப்பு
1 mins read

