சென்னை: தமிழக அரசு 19 ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றியுள்ளது. கடலூர், சேலம், திருவண்ணாமலை, சிவகங்கை ஆகிய நான்கு மாவட்ட ஆட்சியர்களும் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். இவர்கள் உட்பட பல்வேறு பொறுப்புகளில் இருந்த 19 ஐஏஎஸ் அதிகாரிகள் பதவி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் பள்ளிக் கல்வித் துறை, கால்நடை, பால்வளம், மீன்வளம் உள்ளிட்ட சில துறைகளில் தற்காலிக முதன்மை செயலாளர் என்ற பதவி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்
1 mins read

