அதே நேரம் தினகரன் ஆதர வாளர்கள் பழனிசாமி, ஓபிஎஸ் ஆகியோரின் உருவபொம்மையை எரித்துப் போராட்டம் நடத்தினர். தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவை குண்டத்தில் நடைபெற்ற போராட் டத்தில் பங்கேற்ற தினகரன் ஆதர வாளர்கள், "சசிகலா, தினகரன் ஆகியேர் மட்டுமே கட்சியைத் தொடர்ந்து நடத்த முடியும். இது தவறும்பட்சத்தில் நாங்கள் தற் கொலைப்படையாகவும் மாறத் தயங்க மாட்டோம்," என்று ஆவே சத்துடன் கூறினர். தொடர்ந்து அவர்கள் எதிர்ப்பு முழக்கங்களை எழுப் பினர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. போலிசார் குவிக்கப்பட்டனர்.
தற்கொலைப் படையாக மாறுவோம் - தினகரன் ஆதர வாளர்கள்
1 mins read
-

