பயமுறுத்தும் ஆட்சியாளர்கள்: தினகரன் தரப்பு குற்றச்சாட்டு

பயமுறுத்தும் ஆட்சியாளர்கள்: தினகரன் தரப்பு குற்றச்சாட்டு

1 mins read
4f5c2199-fb42-44cd-862e-fde706b7e703
-

சென்னை: அரசுக்கு எதிராகப் பேசுபவர்கள் மீது வழக்கு தொடுப்பது ஜனநாயகத்துக்கு ஆபத்தை விளைவிக்கும் செயல் என தினகரன் ஆதரவாளரான தங்க தமிழ்ச்செல்வன் எம்எல்ஏ கூறியுள்ளார். டிடிவி தினகரன் மீது தேசத்துரோக வழக்கைப் பதிவு செய்து ஆட்சியாளர்கள் பயமு றுத்த நினைப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இதற்கு முன்பு 18 எம்எல்ஏக் களைத் தகுதி நீக்கம் செய்தது போல், தேசத்துரோக வழக்குப் பதிவு செய்து துணைப் பொதுச் செயலரான தினகரனை பயமு றுத்த நினைப்பதாகக் குறிப்பிட்ட அவர், ஆட்சியாளர்களின் எண் ணம் நிச்சயம் ஈடேறாது என்றார்.